மதுரை, ஜன. 22–
குருவாயூரில் இருந்து மதுரை வழியாக சென்னைக்கு பகல் நேரத்தில் தினசரி ரெயில் (வ.எண். 16128) இயக்கப்படுகிறது. இந்த ரெயிலில் தூத்துக்குடியில் இருந்து வரும் இணைப்பு ரெயிலும் (வ.எண். 16130) இணைக்கப்படுகிறது.
குருவாயூரில் இருந்து வரும் ரெயிலில் 5 பொது பெட்டிகளும், 4 இரண்டாம் வகுப்பு உட்காரும் வசதி கொண்ட முன்பதிவு பெட்டிகளும், 4 இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி முன்பதிவு பெட்டிகளும், 2 மூன்றடுக்கு குளிரூட்டப்பட்ட பெட்டிகளும், ஒரு 2–அடுக்கு குளிரூட்டப்பட்ட பெட்டியும் இணைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் பயணிகளின் கூட்ட நெரிசலை சமாளிக்க அந்த ரெயிலில்...
more... இரு மார்க்கங்களிலும் கூடுதல் பெட்டி இணைக்கப்பட உள்ளது.
இது குறித்து மதுரை கோட்ட மக்கள் தொடர்பு அலுவலர் ஓம்பிரகாஷ் நாராயணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–
குருவாயூர்–சென்னை எக்ஸ்பிரஸ் ரெயிலில் (வ.எண். 16127, 16128) இரு மார்க்கங்களிலும் கூடுதல் பெட்டி இணைக்கப்படுகிறது. அதன்படி வருகிற 2–ந்தேதி முதல் ஏப்ரல் மாதம் 1–ந்தேதி வரை ஒரு 2–ம் வகுப்பு தூங்கும் வசதி முன்பதிவு பெட்டியும், ஒரு 2–ம் வகுப்பு உட்காரும் வசதி கொண்ட முன்பதிவு பெட்டியும் இணைக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.