Requisition to construct a New Railway Platform @ 100ft Road, Puducherry inorder to ease the users n to benefit railways since no proper connection yet from city to the station.
Requisition for a new Railway platform @ 100ft road, puducherry.. Former MP mr. Ramadoss has already got permission from railway board n papers been submitted for that n approval was also given by SR. But later loksabha election came n all those works got stopped.. Now as the no. of trains has increased n ppl started using trains,there s no proper connectivity b/w station n the city. So puducherry rail users association had asked the officials to construct a new platform for ease the passengers to utilise well on rail service..
புதுச்சேரி,...
more... நூறு அடி சாலையில் பிளாட்பார்ம் அமைத்து, அனைத்து ரயில்களும் நின்று செல்வதற்கு, ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கடந்த காலங்களில், புதுச்சேரி ரயில் நிலையத்திற்கு, தினசரி, ஓரிரு ரயில்கள் மட்டுமே வந்து செல்லும். ஆரம்பத்தில், புதுச்சேரியில் இருந்து விழுப்புரத்துக்கும், விழுப்புரத்தில் இருந்து புதுச்சேரிக்கு மட்டுமே ரயில் இயக்கப்பட்டது. ரயிலில் பயணம் செய்பவர்களின் எண்ணிக்கையை விரல்விட்டு எண்ணி
விடலாம்.
தற்போது, நிலைமை தலைகீழாக மாறி விட்டது. புதுச்சேரியில் இருந்து, நாட்டின் பெருநகரங்கள் பலவற்றுக்கும் ரயில் சேவை வழங்கப்படுவதால், ரயிலில் பயணம் செய்வதற்கு, புதுச்சேரி மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.
மும்பை, டில்லி, கொல்கத்தா, புவனேஸ்வர், பெங்களூரு, திருப்பதி, கன்னியாகுமரி, சென்னை, மாகி, ஏனாம் உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு, இங்கிருந்து, ரயில்கள் இயக்கப்படுகின்றன. 17க்கும் மேற்பட்ட ரயில்கள், புதுச்சேரியில் இருந்து விழுப்புரம் வழியாக இயக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
இதன் எதிரொலியாக, புதுச்சேரியில் ரயில் உபயோகிப்பாளர் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது. இருந்தபோதும், புதுச்சேரி ரயில் நிலையத்துக்கு, தேவையான அளவிற்கு பஸ் வசதி இல்லாததால், ரயில் பயணத்துக்கு, பயணிகள் தயக்கம் காட்டுகின்றனர். குறிப்பாக, இரவு நேரத்தில் பஸ் வசதி கிடையாது.
எனவே, ரயில் பயணிகளுக்கு வசதியாக, புதுச்சேரி, நூறு அடி சாலையில், அனைத்து ரயில்களும் நின்று செல்வதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்பது நீண்டநாள் கோரிக்கையாக உள்ளது.
நூறு அடி சாலையில், 24 மணி நேரமும், பஸ் உள்ளிட்ட போக்குவரத்து வசதிகள் உள்ளது. மேலும், இங்கிருந்து நகரத்தின் எந்த பகுதிக்கும் எளிதாக செல்ல முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
ரயில்கள் நின்று செல்வதற்கு வசதியாக, நூறு அடி சாலையில், ரயில் பிளாட்பார்ம் அமைப்பதற்கு, எம்.பி.,யாக இருந்த பேராசிரியர் ராமதாஸ் முயற்சி எடுத்தார். அவரது முயற்சியால், ரயில்வே உயரதிகாரிகள், நூறு அடி சாலையை பார்வையிட்டு ஆய்வு நடத்தினர்.
பிளாட்பார்ம் அமைப்பதற்கான திட்ட அறிக்கையும் தயாரிக்கப்பட்டு, பணிகளை துவக்குவதற்கு, நடவடிக்கை எடுக்கப்பட்டது. கடந்த லோக்சபா தேர்தல் குறுக்கிட்டதால், கோப்பு கிடப்பில் போடப்பட்டு விட்டது.
புதுச்சேரி மக்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும், நூறு அடி சாலையில், ரயில்வே பிளாட்பார்ம் அமைக்கும் திட்டத்தை செயல்படுத்துவதற்கு, ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இது, ரயில் பயணிகளுக்கு வசதியாக இருப்பதுடன், ரயில்வே துறைக்கும் வருவாய் அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
Courtesy: Dinamalar