நாட்டின் முதல் பசுமை ரயில் பாதையாகிறது மானாமதுரை - ராமேஸ்வரம் ரயில் பாதை
நாட்டிலேயே முதலாவதாக மானாமதுரை - ராமேஸ்வரம் ரயில் பாதை, முற்றிலும் பசுமை ரயில் பாதையாக மாற இருப்பதாக ரயில்வே அறிவித்துள்ளது.
114 கிலோ மீட்டர் தூரம் கொண்ட இந்த வழித்தடத்தில் செல்லும் ரயில்களில் கழிவுகள் பூமியில் விழாத வகையிலான பயோ டாய்லெட் அமைக்கப்பட்டு சோதனை நடைபெற்று வருவதாக ரயில்வே உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார். இந்த மாத இறுதியில் இந்தப் பாதையை பசுமை ரயில்ப் பாதையாக ரயில்வே அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளதாகவும் அவர் கூறினார். மானாமதுரை - ராமேஸ்வரம் வழித்தடத்தில் 14 ரயில் நிலையங்கள் இருப்பதாகவும், இந்த ரயில் பாதையில் தினமும் 16 ரயில்கள் சென்று வருவதாகவும் அந்த அதிகாரி தெரிவித்தார்