1ம்தேதி முதல் சிலம்பு எக்ஸ்பிரஸ் அருப்புக்கோட்டை விருதுநகர் வழியாக செங்கோட்டை வரை இயக்கம் எம்பி மாணிக்கம்தாகூர் தகவல்
விருதுநகர், : சென்னையில் இருந்து மானாமதுரை வரை இயக்கப்படும் சிலம்பு எக்ஸ்பிரஸ் ரயில் பிப்ரவரி 1ம் தேதி முதல் அருப்புக்கோட்டை, விருதுநகர் வழியாக செங்கோட்டை வரை இயக்கப்படும் என ரயில்வே துறை அமைச்சர் மல்லிகார்ஜூன கார்கே உத்தரவிட்டு இருப்பதாக எம்பி மாணிக்கம்தாகூர் தெரிவித்தார்.
விருதுநகர் எம்பி மாணிக்கம்தாகூர் கூறுகையில், விருதுநகர்-மானாமதுரை அகல ரயில் பாதை கடந்த ஜூலை 14ம் தேதி நாட்டுக்கு அர்ப்பணிக்கப் பட்டது. பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாளான ஜூலை 15ம் தேதி அகல ரயில் பாதையில் புதுச்சேரியில் இருந்து மானாமதுரை, விருதுநகர் வழியாக கன்னியாகுமரி வரை ரயில் போக்குவரத்து தொடங்கியது.
விருதுநகர்-காரைக்குடி...
more... இடையே அருப்புக்கோட்டை, திருச்சுழி, நரிக்குடி, மானாமதுரை வழியாக கடந்த செப்டம்பர் 9ம் தேதி முதல் பயணிகள் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து காரைக்குடி- விருதுநகர் மற்றும் ராமேஸ்வரத்தில் இருந்து மானாமதுரை, விருதுநகர் வழியாக செங்கோட்டை வரை தினசரி பயணிகள் ரயில்கள், சென்னை சிலம்பு எக்ஸ்பிரஸ் ரயிலை அருப்புக்கோட்டை, விருதுநகர் வழியாக செங்கோட்டை வரை நீட்டிக்க மத்திய ரயில்வே அமைச்சர் மல்லிகார்ஜூன கார்கே மற்றும் ரயில்வே நிலைக்குழு தலைவர் டி.ஆர்.பாலு ஆகியோரை சந்தித்து வலியுறுத்தினேன்.
இதனைத் தொடர்ந்து வரும் பிப்ரவரி 1ம் தேதி முதல் சிலம்பு எக்ஸ்பிரஸ் ரயில் அருப்புக்கோட்டை, விருதுநகர் வழியாக செங்கோட்டை வரை இயக் கப்பட உள்ளது. சென்னை யில் இருந்து சிலம்பு எக்ஸ்பிரஸ் ரயில் மானாமதுரைக்கு காலை 7.45 மணிக்கு வந்து சேருகிறது.
மானாமதுரையில் இருந்து காலை 9.15 மணிக்கு புறப்பட்டு அருப்புக்கோட்டை, விருதுநகர், சிவகாசி, ராஜபாளையம் வழியாக பிற்பகல் 1.15மணிக்கு செங்கோட்டை சென்றடையும். செங்கோட்டையில் இருந்து பிற்பகல் 2.30 மணிக்கு புறப்பட்டு மாலை 6.30 மணிக்கு மானாமதுரை சென்றடையும். மானாமதுரையில் இருந்து இரவு 9மணிக்கு சிலம்பு எக்ஸ்பிரஸ் ரயில் சென்னைக்கு புறப்பட்டு செல்லும். பொதுமக்களின் நீண்டநாள் கோரிக்கையை ரயில்வே அமைச்சர் நிறைவேற்றித் தந்துள்ளார் என்றார்.
manick tagore virudhunagar mp, he told silambu exp extend up to sengottai via aruppukottai,virudhunagar,rajapalayam from feb 1,2014.