Click here to read the news
கோவையில் இருந்து சேலம், வழியாக செல்லும், திருப்பதி இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயிலை, ஈரோட்டில் நிறுத்தி செல்ல வேண்டும், என, பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
கோவை வழியாக, திருப்பதிக்கு தனி ரயில் விடப்பட வேண்டும், என்ற பொதுமக்களின் பல ஆண்டு கோரிக்கையை, கடந்த, 2010-11 ரயில்வே பட்ஜெட்டில், அப்போதைய ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜி நிறைவேற்றினார்.
தற்போது இந்த ரயில், இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயிலாக மாற்றப்பட்டுள்ளதால், கோவைக்கு அடுத்து சேலத்தில் தான், இந்த ரயில் நிறுத்தப்படும், என்று, தென்னக ரயில்வே பொது மேலாளர் அறிவித்தார்.
இதுகுறித்து,...
more... முன்னாள் தென்னக ரயில்வே ஆலோசனைக்குழு உறுப்பினர் பாஷா கூறியதாவது: கோவையில் இருந்து திருப்பூர், ஈரோடு ஸ்டேஷன்களில் நிறுத்தப்பட்டு, வாரத்துக்கு, மூன்று நாட்களாக இயக்கப்பட்டு வந்த ரயில் சேவை, கடந்த, 2014 ரயில்வே பட்ஜெட்டில், நான்கு நாட்களாக நீட்டிக்கப்பட்டது. வரும், ஜூன் ஒன்று முதல், கோவையில் இருந்து புறப்படும் ரயில், சேலத்தில் தான் நிற்கும், என, அறிவிக்கப்பட்டுள்ளது. ஈரோட்டில் முன்பதிவுக்காக சென்ற பயணிகள், திருப்பி அனுப்பப்படுகின்றனர்.
தென்னக ரயில்வேயில், அதிக வருவாய் தரக்கூடிய, ஈரோடு ரயில்வே ஸ்டேஷனில், திருப்பதி ரயிலை நிறுத்த, அனுமதி மறுத்துள்ளது கண்டிக்கத்தக்கது.
எங்கும் நிற்காத துரந்தோ எக்ஸ்பிரஸ் ரயில் கூட, ஈரோட்டில் தண்ணீர் பிடிப்பதற்காகவும், சாப்பாடு ஏற்றுவதற்கும் நிற்கிறது. எனவே, கோவை-திருப்பதி ரயிலை திருப்பூர், ஈரோடு ஸ்டேஷன்களிலும் நிறுத்தி செல்ல வேண்டும். நடவடிக்கை எடுக்காத பட்சத்தில், பொதுமக்கள், ரயில் பயணிகளை ஒன்று திரட்டி, பெரும் போராட்டம் நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
I have complained in PG portal site with the complaint number MORLY/E/2014/04528 . You can check the status at
click here