மதுரை மாநகருக்குத் தென் திசையில் நுழை வாயிலாக இருப்பது திருமங்கலம். இவ்வூரிலுள்ள தொடர் வண்டி நிலையம் வழியாகப் பல விரைவு வண்டிகளும் பயணிகள் வண்டிகளும் செல்கின்றன. ஆனால் முத்துநகர் எக்ஸ்பிரஸ் மற்றும் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் வண்டிகளைத் தவிரச் சென்னை செல்லும் பிற வண்டிகள் இங்கே நிற்பதில்லை. இது மிகப்பெரிய குறை. சென்னை செல்லும் அனைத்து வண்டிகளும் இங்கு நிறுத்தப்பட்டால் பயணிகளுக்கு மிகப் பெரிய வசதியாக அமையும்.