காரைக்குடியில் இருந்து பட்டுக்கோட்டைக்கு ஒரு நாள் சோதனை ஓட்டமாக சிறப்பு ரயில் இயக்கப்பட்டது.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியிலிருந்து தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை வரை இருந்த மீட்டர் கேஜ் ரயில் பாதையை அகலப்பாதையாக மாற்றும் பணிகள் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கப்பட்டது.
இப்பாதையில் கடந்த 2012 மார்ச் 15ஆம் தேதி கடைசியாக ரயில் இயக்கப்பட்டது.
இந்நிலையில், காரைக்குடி - பட்டுக்கோட்டை இடையிலான 72 கிமீ தொலைவுக்கான பணிகள் முடிக்கப்பட்டு கடந்த பிப்ரவரி 28 முதல் மார்ச் 2ஆம் தேதிகள் வரை பாதுகாப்பு ஆணையர் பாதுகாப்பு பரிசோதனைகளை மேற்கொண்டார்.
இவ்வழித்தடத்தில்...
more... கடந்த மார்ச் 1ம் தேதி அன்று அதிவேக ரயிலின் சோதனை ஓட்டமும் நடைபெற்றது.
இதனையடுத்து காரைக்குடி தொடங்கி பட்டுக்கோட்டை வரை உள்ள வழித்தடத்தில் மணிக்கு 73.47 கிலோ மீட்டர் வேகத்தில் சிறப்பு ரயில் இன்று இயக்கப்பட்டது.
காலை 10 மணிக்கு காரைக்குடியில் புறப்பட்ட அந்த ரயில் மதியம் 1 மணிக்கு பட்டுக்கோட்டை சென்றடைந்தது.
அதே மார்க்கத்தில் மதியம் 3 மணிக்கு பட்டுக்கோட்டையில் இருந்து புறப்படும் ரயில் மாலை 6 மணிக்கு காரைக்குடி சென்று சேரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வரும் ஏப்ரல் 6 அல்லது 7ஆம் தேதியில் இருந்து இந்த வழித்தடத்தில் முறைப்படி ரயில் போக்குவரத்து தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.